Tuesday, September 21, 2010

இணையத்தில் அசலாக வேட்டையாடலாம்

இணையத்தில் A முதல் Z வரை தேடுவதற்காக பயன்படுத்துகிறோம் ஆனால் அதிலும் மிக திறமையாக தேடுவோர் மிக சிலரே. காரணம் சரியான யுத்திகள் தெரியாமல் இருப்பதுதான்  என்பேன். இந்த இடுகையில் நோக்கம் தேடுதலை செம்மையாக்குவதே.


தேடுதளங்கள் அடிப்படையில் பல ராகங்களாக இருந்தாலும் முதன்மையாக பிரிப்பது "தேடும் விதம்" மற்றும் "தேடுமிடம்".



தேடும் விதம் என்றால், நாம் தரும் கேள்விக்கு அந்த எந்திரம் எப்படி தேடுகிறது என்கிற முறையில் பகுக்கப்படுவது. {Informative analysis}
இதில், 
க்ராவலர் தேடுதளங்கள் 
அடிக்கடி தங்கள் (crawler)  இயக்கிகள் மூலம் எல்லாதளங்களுக்கும்  தவழ்ந்தச்  சென்று செய்திகளை சேகரித்துக் கொண்டுவரும். இதன் மூலம் தங்கள் சொந்த தகவல்தளத்தில்  (database) சேமித்துக்கொள்ளும். இதன் தொழிற்நுட்பம்  மிகவும் வரண்டது ஆனால் இதுதான் பிரதானமாக பயன்படுகிறது.
அடுத்ததாக சில தளங்களின் தேடுபொறி தான் தேடாமல் அடுத்த, அதாவது க்ராவலர் வகை தளங்களிடமிருந்து பெற்றுத்தரும் இவை மேட்டதேடல் {தமிழ்ப்பதமாக உருவகத்தேடல் எனக் கொள்ளலாம்). இவற்றின் சிறப்பு, ஒரே தேடலை பலதளத்தில் தேடிய புண்ணியம் தரும்.

அடுத்ததாக திரள் தேடுதளங்கள் எனலாம். கூகிள் போன்றவை ஒரே பரிமாணத் தேடலைத்தரும்  ஆனால் இவை முப்பரிமாணத் தேடல்களைத்தரும். இதை நான் கூறுவதைவிட அனுபவித்துப்பாருங்கள் 
அடுத்ததாக கணித்துவத் தேடுதளங்கள். இவை முன்னதைப் போல பரந்த பதிலைத் தருவதில்லை மாறாக கூர்மையான பதிலைத்தரும். நாம எதைத்தேடுகிறோமோ அதனைப் பற்றி மட்டும் விவரிக்கும் .இத்தகையத் தேடலில் வினைத்தொடர்களாக கேள்வியைக் கேட்க கூடாது. 

சொற்பொருள் தேடுதளங்கள் (sematic search engine) இவை HTML அல்லாத மற்றுவடிவ கோப்புகளிலிருந்தும் தேடலைச் செய்யும். இதில் டிவிட்டரையும் சேர்த்துத் தேடும் 
இவற்றும் மேல் சமுகத் தேடுதளங்கள் உள்ளன. இவை பெரிதாக தகவலைத்  திரட்டத்தேவையில்லை மக்கள் மக்களுக்காக பதில்களை இட்டுச்செல்வார்கள் நாமும்  தெரிந்த கேள்விக்கு பதிலளிக்கலாம். இதன் சிறப்பு என்னவென்றால் உங்களுக்கு கிடைக்கும் பதில்கள் அனுபவப் பூர்வமானது.
என்றால் ஒரு குறிப்பிட்ட விஷயங்கள் சார்ந்த தேடும் தளங்களாகப் பிரிக்கப்படுவது (subject analysis).  நாம் குறிப்பிட்ட துறை பற்றி தெளிவாகப் பெறலாம்.

செய்திகளுக்கானத் தேடலுக்கு 



வேலைவாய்ப்புத் தேடலுக்கு 

சொத்துடமை தேடலுக்கு 









வணிகத் தேடலுக்கு 
மேலதிகத் தளங்களுக்கு:http://searchenginewatch.com/2156331

கண்ணொளித் தேடலுக்கு 



from Ethir neechal.

இந்திய அரசு இணையதளத்தில் சீனா ஆக்கிரமிப்பா?

இந்தியாவின் உயரியப் பதவிகளுக்கு தேர்வு நடத்தும் UPSC இணைய தளத்தில் சீன இணைய தளங்களுக்கு மறைமுகமாக இணைப்புக் கொடுக்கப்பட்டுள்ளது.

செப் 18 2010 இரவு http://upsc.gov.in இணையதளத்தில் உலவிக் கொண்டிருக்கையில் அதன் தளக் கட்டுமானம் பழைய வடிவத்தில் இருப்பதால் தற்செயலாக அதன் மூல நிரலிகளை[source code] எடுத்துப் பார்த்தேன். அதில் சற்றும் எதிர்பாராதவிதமாக சீன இணைய தளங்களுக்கு இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. இவை சாரதாரணக் கண்களுக்குப் புலப்படாதவாறு நிரலியாக்கம் செய்யப்பட்டுள்ளது. 36 முறை அந்நிய இணையத்திற்கு இணைப்புக் கொடுக்கப்பட்டிருந்தது, மீண்டும் இன்றும்[sep 20] அந்த நிரலிகள் அங்கேயே உள்ளது.


பொதுவாக இந்தியா அரசு தளங்கள் தனிநபர் விளம்பரமே கொடுக்காத நிலையில் அந்நிய நாட்டு தளத்திற்கு அதுவும் மறைமுகமாக கொடுக்கப்பட்டிருப்பது புதிராகவுள்ளது. சீனாவின் இணைய ஹாக்கிங் இதில் தலையிட்டுள்ளதா? அல்லது இந்தியா பொறியாளர்களின் கவனக் குறைவாக? வேறு இந்திய இணைய தளங்களிலும் இப்படி உள்ளதா? என்கிற கேள்விகள் எனக்கு எழுகிறது.

இதனால் எனக்குத் தெரிந்து இணைப்புக் கொடுக்கப்பட்டுள்ள தளங்களுக்கு தர ரேங்குகள் அதிகரிக்கும். மற்றும் சில நிரலிகள் எழுதி வேண்டிய இடங்களில் இந்த இணைய தளத்தை தடை செய்யவும் முடியும். அதுதவிர வேறு எதற்கு என்று யூகிக்க முடியவில்லை.

எதுவாகயிருந்தாலும் நமது அரசு தளத்தில் மாற்று நிரலிகள் இருப்பது கவனிக்கப்படவேண்டிய ஒன்று.


1. upsc தளத்தின் மூல நிரலியின் படம் இது.
2. ஒரு தனியார் நிறுவன தளத்திற்கு 30 முறை இணைப்புக் கொடுக்கப்பட்டுள்ளது.
3. மற்றும் இரு தளத்திற்கு[புதிரான] இணைப்புக் கொடுக்கும் ஜாவா நிரலியுள்ளது.

upsc தளம் upsc தகவல் தொழிற்நுட்ப பிரிவின் மூலமாக பராமரிப்பட்டு, Mahanagar Telephone Nigam Limited மூலமாக வழங்கப்படுகிறது.

உரிய அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் முகவரிகள் ஏதும் என்னிடமில்லாததால் தகவல் அறிந்தவர்கள் தெரியப்படுத்தலாம்.

வழக்கம் போல இப்பதிவும் காப்பி ரைட் செய்யவில்லை. பகிர்ந்து கொள்பவர்கள் பயன்படுத்தலாம்.

நீங்க பாட்டுக்கு குத்துங்க நான்பாட்டுக்கு எண்ணுறேன்

from

http://ethirneechal.blogspot.com/2010/09/china.html

Friday, August 27, 2010

மரங்களின் மகிமை

மரங்களின் மகிமை (தந்தை மகனுக்கு...)

ஆ.திருநாவுக்கரசன்
மரங்களின் மகிமை பற்றி
அவசியம் உனக்குச்
சொல்ல வேண்டும்.
மனிதன் உறிஞ்சிய நீர்
சிறுநீர் அல்லது வியர்வை;
மற்றவருக்கு நிழல் தரும்
மரங்கள் உறிஞ்சிய நீர்
பூக்கள் மற்றும் கனிகள்!
மரங்களை மதித்தோமா நாம்?
காடுகள் மழிப்பு
கண்மாய்கள் அழிப்பு
ஓசோனில் ஓட்டை
இப்படியே போனால்
இரண்டாயிரத்து எழுபதில்
இருக்காதாம் தண்­ர்!
ஒரு குவளை தண்­ருக்கு
ஒரு கொலையே நடக்கும்
மரங்கள் மொட்டையாகும்
மனிதரெல்லாம் வழுக்கையாவார்;
மரத்தில் தூளியாடி
மகிழ்ந்த நிகழ்வெல்லாம்
முறத்தால் புலி துரத்திய
புறநானூற்றுப் பாடலாய்
இலக்கியத்தில் மட்டுமே
இருக்கும் இனி!
வகுப்பறையில்
வரலாற்றுப் பாடத்தில்
பூமியில் இருந்து - பின்பு
காணாமல் போன பட்டியலில்
தண்­ர் முதலிடத்தைத்
தக்கவைக்கும் எப்போதும்!!
சம்பளம்
தண்­ரின் அளவில்
தரப்படலாம்!
தொழிற்சங்கங்கள்
போராட்டம் நடத்தும்
புதிய சம்பளத்தை
எந்நூறு லிட்டர் தண்­ர்
என்று குறிக்கக் கோரி
போனசாகத் தண்­ர்க் கோரி
போராட்டம் நடக்கும்!
குழாயடியில்
குடுமிபிடி சண்டை இராது
தமிழகமும் கர்நாடகமும்
தண்­ருக்காகச்
சண்டையிடாது!
மாப்பிள்ளை வீட்டார்
வரதட்சிணையில்
ஐந்து குடம் தண்­ர்
அதிகமாகக் கேட்கலாம்?
ஒத்துக்கொள்வதோ
பத்துக் குடம்
அதற்கே விழிபிதுங்க
அதிகம் ஐந்து குடத்திற்கு
எங்கே செல்வார்?
தாகம் தீரத்
தண்­ர்க் குடிப்பது
ஆட்சியாளருக்குக்கூட
ஆடம்பரம் ஆகிப்போகும்?
ஒரு குவளைத் தண்­ர் இருந்தால்
உள்ளூர்ப் பணக்காரர்;
ஒரு குடம் வைத்திருந்தால்
உள்நாட்டுப் பணக்காரர்;
ஒரு அண்டா வைத்திருந்தால்
உலகப் பணக்காரராய்
வலம் வரலாம்!
மூடி வைத்திருந்த மனிதன்
பரிணாமத்தின் படியாய்
குறிக்கப்படுவான்?
முகில் என்று - காதலி
முடியைப் பாட முடியாது,
முகிலும் இருக்காது
முடியும் இருக்காது
தலையெழுத்தைப் படிக்க
தடையிருக்காது - பாவம்
முடிதிருத்தும் தொழிலாளி?
மனிதர் எல்லாம்
திருப்பதி சென்று
திரும்பியவர் போல
திரிந்து அலைவார்!
துச்சாதனன் பாவம்
பிடித்து இழுத்து வர
பாஞ்சாலிக்கு கூந்தல் இருக்காது!
பாஞ்சாலியும் பாவம்
அவிழ்த்து சபதமிட
அவளுக்கும் கூந்தல் இருக்காது!
முதல் கல்யாணமே
அறுபதாம் கல்யாணம் போல
முதிர்ந்த தோற்றத்தில்
மணப்பெண்ணும் மாப்பிள்ளையும்....
திருமணச் சடங்கில்
மாலைகள் என்பது
வழக்கொழிந்த விசயமாகும்!
இறந்தவர் சடலத்திற்கு
இறுதி அஞ்சலிக்கும்
மலர் இருக்காது!
சைவம் மட்டுமே
சாப்பிடுவோர் பாவம்
உண்டு வாழ
ஒன்றும் இராது
சதை உண்பதையும்
சைவம் உண்பதாய்
சகித்தால் மட்டுமே
உயிர் வாழ்க்கைச் சாத்தியம்?
இப்போதே விழிக்கச் செய்
இயற்கையை அழித்தல் தடு
மறுத்துவிட்டால்,
நீண்டு கிடக்கும் நெடுஞ்சாலையில்
மாண்டு கிடக்கும் நாய் போல
மதிப்பற்றுப் போகும்
மனித வாழ்க்கை!
விழித்தெழாத மனிதனை
பழித்தெழுதும் வரலாறு
இயற்கையை அழித்தது
இந்த நாட்டுமிராண்டிதான் என்று!
ஆகவேதான்
நீயும் விழி
நின் சுற்றமும் விழிக்கச் செய்!

வைரமுத்துவின் "காதலித்து பார்"

Friday, August 13, 2010

India in 2020...................................?

online galatta
      

2020-ல் இந்தியா?

கூடல்
அர்த்தநாரீஸ்வரரின் ஆளுகைதான் இங்கு
எங்கும் தலைவிரித்து ஆடுகிறதோ என்று
எண்ண தோன்றுகிறது.
"மேல் தட்டு மன்னர் - அடித்தட்டு மக்கள்
விண்வெளி வெள்ளோட்டம் - வயல்வெளி வெள்ள ஓட்டம்
வெள்ளம் - வறட்சி"
இன்னும் பட்டியல் ஏராளம்,
2020-ல் இந்தியா?
இந்திய தேசம் வல்லரசு ஆகிவிடலாம்,
ஆனால் என் இனத் தமிழன் அன்றும் ஏர்பூட்டி
வயற்காட்டிற்குத்தான் நடந்து கொண்டிருப்பான் .
"அவன் அடுத்த வேலை சோற்றுக்கு!"
"அவன் கண்டவையோ ஏராளம்,
வறட்சியில் பட்டினிச்சாவு,
வெள்ளத்தில் பொட்டலச்சோறு,
அழுகிய பயிர்கள், உணவிற்கு எலிக்கறி,
இன்னும் எத்தனையோ!"
"எல்லாவற்றையும் தாண்டி,
அவன் தன் வாழ்க்கையை தொடங்கிய தொலைவிலேதான்
இன்றும் இருக்கிறான், முன்னேற்றம் இன்றி!
"தமிழகத்தின் மீது சோக ரேகைகள்
இன்றும் படர்ந்து கொண்டுதான்
இருக்கின்றன - வறண்ட நதிகளாய்!"
இந்தியா முன்னேறுகிறது?
ஆம் இந்தியா முன்னேறுகிறது.
"மென்பொருள் தயாரிக்கும் இந்தியனுக்கோ
மாதத்திற்கு பல லகரங்கள்,
உணவுப்பொருள் உற்பத்தியாக்கும்
இந்தியனுக்கு?
வருடந்தோறும் அரசாங்கம் தரும்
இழப்பீட்டு தொகைதான் - அவன்
வருட வருமானமோ?....."
"உழவனின் அரிசி என்ன
அற்பமாகிவிட்டதா?
மறந்துவிட்டாயா மனிதனே,
உன் இறப்பிலும் கூடவருவது
வாய்க்கரிசிதான்!"
தோழனே, நம் நாடு 2020-ல் வல்லரசாகிவிடும்,
அதில் ஐயமில்லை - அன்று
நம் உழவுத்தோழனை
சிற்றரசனாக்க வேண்டாம்,
ஒரு சராசரி மனிதனாகவாவது
அவன் களிப்பாக வாழட்டுமே?

இது திருடப்பட்டது கவிதை....